ராகம்: பரசு
தாளம்: ஆதி
ஆ – ஸரிகமபதநிஸ்; அ - ஸ்நிதமதபமகரிஸ
பெரிய புராண கீர்த்தனை
பல்லவி
ஆளாவ தென்னாளோ சிவமே அடியார்கடியார்க் கடியனாய் (உன்)
அனுபல்லவி
கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம்
தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவ)
சரணம்
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால் புண்ணிய பிறவியாக வேணும்
இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும் இல்லாபதத்திணையாகவேணும்(இ)
1. காழிமணம் சிவபாதமகன் திருநாவரசன் மணிவாசக சுந்தரன் எனும் (இன்ன)
2. சிறுத் தொண்டர் திருநீலகண்ட விறன் மீண்டநமி நந்தி தண்டி அடிகளெனும் (இன்ன)
3. ஐயடிகள் காடவர்கோன் ஆனாயகணம் புல்லர் நின்ற சீர்நெடுமாற
கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவாரெனும் (இன்ன)
4. மெய்பொருளார் பெருமிழலைக் குறும்பர் ஏனாதிநாத கவிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரய சடைய சண்டேச கலிய காரியாரெனும் (இன்ன)
5. மானக்கஞ்சார நேச பூசலாரொடு வாயிலார் சோ
மாசிமாற மங்கையர்க்கரசி குங்கிலியக் கலயார் இளையான்குடி
மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புவி சாக்கியர் சத்தியள் - சிறப்
புலியர் செறுத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையரெனும் (இ)
6. திருமூல முருக மூர்த்தி அப்பூதிருத்தர பசுபதியார் இசைஞானியர்
நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர் கோனொடு
நீலகண்ட யாழ்பாண புகழ் சோழ கோட்செங்கட்சோழ கழற்சிங்கர்
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத் தொண்டரனும் (இன்ன)
இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆ)
Sunday, December 28, 2008
Aruna Sairam - 4.1 - ALAva-dennALO (periya puraaNa keertanai) - paras - mArgazhi mahA utsavam 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment